பிரணவம் என்பதற்கு வேறு பெயர் குடிலை ஒங்காரம்,தனிமொழி
என்பன. அது’’ஒம்’’ என்பதுவே அதுவே மூலமானது.
‘’ஒம்’’ எனும் சொல் வலிமையும்,ஆற்றலையும் கொடுக்க
வல்லது.
‘’ஒம்’’ என்ற பிரணவம் இல்லாத மந்திரம் சுவரில்லாத
சித்திரம் போன்றதாகும்.
‘’ஒம்’’என்ற சொல் எல்லா வித தெய்வங்களையும்,
தேவதைகளையும் வரவேற்கும் தன்மை படைத்தது.
பிரணவம் இரு வகைப்படும்
1,சமஷ்டி பிரணவம்,
2,வியஷ்டி பிரணவம்,
சமஷ்டி பிரணவம் என்பது தொகுத்துக் கூறுவது அது’’ஒம்’’என்பதாகும்.
வியஷ்டி பிரணவம் என்பது வகுத்துக் கூறுவது அது அ-உ-ம
என்ற மூன்று ஒலிகளின் தொகுப்பாகும்,
இம் மூன்றும் முறையே படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய
தொழில்களைக் குறிப்பது.
‘’ஒம்’’ என்ற ஒலியை இறைவனது சக்தியே செலுத்தி நிற்றலால்
’’உய்ய என் உள்ளத்துள் ஒங்காரமாய் நின்ற மெய்யா’’என்கின்றனர்.
No comments:
Post a Comment