பாம்பு
பாம்பு ஊர்வன
வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும்
கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவையெனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரும்
தன்மை கொண்டவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. நூற்றில் ஒரு
விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் ( 1% ).
இந்தியாவிலுள்ள
நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன்
போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக்
காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் எதிரி விலங்குளையும் இரைகளையும் பற்களால்
கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து
வெளியேறி கடிபடும் விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில்
இறக்க நேரிடும்.
இந்தியாவிலே
230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50
இனங்களே நச்சுடையவை.
ஒருவகையான
நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே
நாகப்பாம்பு, பவளப்பாம்பு,
கட்டுவிரியன் என்பன. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக்
குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும்
நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட
காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. பாம்புகளின் மீண்டும்
புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையின் குறியீடாகப்
பயன்படுத்தப்படுகிறது.
பாம்பின்
தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த
ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை ‘கேட்கிறது’.
பாம்பிற்கு காது மடல் இல்லை. பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள்
மட்டுமே. பாம்பின் முதுகெலும்பு நெடுவரிசையில் 200 முதல் 400
முதுகெலும்புகள் உள்ளன. பாம்பின் அதிகமாக அசையக்கூடிய தாடை
எலும்புகள் பெரிய இரைகளை கையாளுதல் மற்றும் உட்கொள்ளுதல் ஆகியவற்றை
எளிதாக்குகின்றன. பாம்புகளின்
இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே
பாம்புகளில் நுரையீரல்களில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது.
எல்லாப்
பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய
ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும்
பூச்சிகளை இவை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக்
கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன.
பாம்புகள்
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன.
விரியன்கள், பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில்
வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு
தருவதில்லை. சில பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. பாம்புகளில்
குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம்
மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாம்பென்றால்
படையும் நடுங்கும்.
பாம்பின்
கால் பாம்பறியும்.
பாம்பிற்க்கு
பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
§ "பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?"
§ "பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே
சாவு"
§ "பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது."
§ "பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று
இருக்க வேண்டும்!"
§ "பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்."
§ "பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று
தாண்டவும் முடியாது."
§ "பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?"
§ "போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்."
§ "பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை
நிமிஷம்.
விஷமுள்ள,
விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:
·
பாம்பின் வால் குறுக்கு
வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு
வகையாகும்.
·
பாம்பின் வால் பகுதி
உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு
வகைகள்.
·
கண்ணுக்கும்,
மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள
குழிவிரியன் வகையாகும்.
·
பாம்பின் முதுகின்
நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு
செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.
·
வயிற்றுபுறம் விரிந்து
காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.
·
தலைப் பகுதியில் பெரிய
கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.
பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:
·
நல்ல பாம்பு மகுடியின்
இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.
·
நல்ல பாம்பும்,
சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண்
பாம்புகள்.
·
நல்ல பாம்பு மிகவும்
வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.
·
நல்ல பாம்பையோ அல்லது
வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.
·
பாம்புகள் வழவழப்பாக
இருக்கும்.
·
பாம்புகள் பாலை
விரும்பி குடிக்கும்.
·
மண்ணுளிப்
பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.
·
பச்சைப் பாம்பு கண்களை
கொத்தும்.
·
கொம்பேறி மூக்கன்
மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த
மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். இவ்வாறு கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதைகள்.
சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.
No comments:
Post a Comment