வெட்டிவேரின் பயன்கள்
மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின்
கடினத்தன்மை போக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில்
அதனைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லை, பயன்படுத்துதலும்
இல்லை. வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர்
சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல்
போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
கொளுத்தும்
கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண்பானை
தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது
கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை
குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு.
கோடைகாலத்தில்
நீர் கடுப்பு, தேக எரிச்சல்,
வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்
படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன்
பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி.
அருந்தினால் தீர்வு கிடைக்கும். முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி
அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த
வெட்டிவேர் விழுது.
காய்ச்சல்
மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும்.
வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர்
பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில்
தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை
குணப்படுத்துகிறது.
நீண்ட
நாட்களாக ஆறாமல் வடுக்கள் இருப்பின் அவற்றின் மேல் வெட்டிவேர் எண்ணெய் தடவி
வந்தால் தழும்பு மறைந்து விடும். இதன்
எண்ணெய்யை
உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி
பாதுகாக்கிறது. வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை
தூண்டுகிறது. மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது
உடலில் உள்ள போதை நீக்க பணிகளை செய்து நிணநீர்க்குரிய வடிகாலை தூண்டுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும்
போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய்
வழியாது.
முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க
ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.
பூக்களின் வாசனை நம் அனைவருக்கும்
தெரியும். ஆனால் வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று
நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வகை
புல்
இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி
உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின்
புல்லையும்
வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி
வேர் என வழங்கப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இதில் ரெசின்,
நிறமி, அமிலம், லைம்,
உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய்
உள்ளது.
உற்சாகம் தரும் வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும்,
உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும்.
விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம்,
இவை நீங்கும். மனம்மகிழ்ச்சி உண்டாகும். கோடை காலத்தில் வெட்டி
வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக்
குறைத்து மணத்தையும் குளிர்ச்சியையும் தரும்
No comments:
Post a Comment