வெட்டிவேரின் மருத்துவப் பயன்கள்
வேரின் பொடி குளிர்ச்சி தருகிறது. காய்ச்சல், வயிறு எரிச்சல் போன்றவற்றிர்க்கு சுகமளிக்கிறது. வெப்பம் தணிக்க பசையாக பூசலாம். இது உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.
வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு வீதம் அருந்தி வர காச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும். வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில் போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல் முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும்.
வெட்டி
வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி
குண்மாகும். கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல்,
வயிற்றுக் கடுப்பு , முதலிய நோயால் அவதிப்
படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன்
பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி.
அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில்
போட்டும் பயன் படுத்துகிறார்கள்.
பருக்கள்
நீங்க:
முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது… சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – ஒரு டீஸ்பூன் கொட்டை நீக்கியகடுக்காய் – 1, இந்த இரண்டையும் முந்தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!.
பரு
தழும்புகள் மறைய:
பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப்
போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும்
அதற்கான நிவாரணம் இதோ… ஒரு பிடி வெட்டிவேரை சிறு
துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும்
தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு
ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர்
ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி
எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள்
மறைந்துவிடும். சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப்பார்கள்.
அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான.
ஒரு
ஸ்பெஷல் பேக்:
வெட்டிவேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ,
செண்பகப்பூ, சம்பங்கி விதை.. இவற்றை சம அளவு
எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும்
திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான
பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து
முகத்தில் பூசி, கழுவுங்கள். வெட்டிவேர் முகத்தில் உள்ள
எண்ணெய் பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை
கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும்,
செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.
சருமம்
மிருதுவாக:
சிலருக்கு
தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில
ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும். இந்த இரு பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு
வெட்டி வேரில் இருக்கிறது. பச்சைப்பயறு – 100 கிராம்,
சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் – 50 கிராம்
இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக்
குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறு கட்டிகளும் வரிகளும் ஓடிப்
போகும். சருமமும் மிருதுவாகும்.
கூந்தல்
மணக்க:
அப்போதுதான் குளித்துவிட்டு
உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா?
வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை
உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும். வெட்டிவேர் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம்
இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணெய்
தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை
பயன்படுத்துங்கள். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு
உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!
வெட்டிவேரை
வீட்டில் வளர்க்கலாம்
மாடியில் அதிக சூரிய ஒளியும்
கிடைப்பதாலும், சமையலறை நீர் மறு உபயோகத்துக்கு
கிடைப்பதாலும் அதிகமாக கரிம நிலைபாட்டில் (Carbon sequestration) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்நார், மண் புழு உரம், காய்ந்த
வேப்ப இலை இவற்றை கலந்து பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி நாற்றுக்களை வைக்க நமது
வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய் நார் இருப்பதால்
அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை.
மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை
செய்யலாம்.
No comments:
Post a Comment