Tuesday, 17 November 2015
உயிர் வர்க்கம்
உயிர் வர்க்கம்
4 வகைத் தோற்றம்
7 வகைப் பிறப்பு
84 லட்சம் உருவ வேற்றுமைகளோடு பிறக்கின்றன.
1.உயிர் வர்க்கம்
நால்வகைத் தோற்றமாவன;
1,அண்டஜம் – முட்டையில் தோன்றுவன,பறவை,ஊர்வன,நீர்
வாழ்வன.
2,சுவேதஜம் – வேர்வையில் தோன்றுவன,கிருமி,பேன் முதலியன.
3,உத்பிஜ்ஜம் – வித்து,வேர்,கொடி,கொம்பு,கிழங்கு,இவற்றில்
தோன்றுவன இவை தாவரங்கள்.
4,சராயுஜம் – கருப்பையில் தோன்றுவன,மனிதரும்,விலங்குகளுமாம்.
7 வகைப் பிறப்புகளாவன.
1,தேவர்
- பதினொரு இலட்சம் பேதம்,
2,மனிதர்
- ஒன்பது இலட்சம் பேதம்,
3,விலங்கு
- பத்து இலட்சம் பேதம்,
4,பறவை
- பதினைந்து இலட்சம் பேதம்,
5,ஊர்வன
- பதினைந்து இலட்சம் பேதம்,
6,நீர் வாழ்வன – பத்து இலட்சம் பேதம்,
7,தாவரம்
- பத்தொன்பது இலட்சம் பேதம் ஆக எண்பத்து நான்கு இலட்சம் பேதங்கள்.
Friday, 13 November 2015
ருத்திராக்ஷம்
ருத்திராக்ஷம்
ருத்திராக்ஷம்,உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும்
இந்த உருத்திராக்ஷம் பல கருத்துக்களை உள்ளடக்கியன,வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு
‘’ருத்திரனின் கண்கள்’’ எனபதாக பொருள் கூறப்படுகிறது.
ருத்திரன் எனபது சிவனை குறிக்கிறது.
‘’Ganitrus’’என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும்
விதைதான் இந்த உருத்திராட்சம்.
இம் மரங்கள் காணப்படும் பகுதி:
இமயமலை அடிவாரம்,கங்கை நதியின் சமவெளிப் பகுதி,மலேயா
மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.
இந்த தாவரம் 90 வகை இருக்கிறது,என தாவரவியல் அறிஞர்கள்
பகுத்துள்ளனர்.
இதில் 25 வகை மரங்கள் இந்தியா மற்றும் நேபாள நாடுகளில்
காணப்படுகின்றன.
இந்த வகை மரங்கள் 80 அடி உயரம் வளரும்,
உருத்திராட்ச மரத்தின் சில வகைகள் தமிழகத்தின் பழநி,நீலகிரி
போன்ற இடங்களில் கேரளாவில் திருவாங்கூர் பகுதியில் கர்நாடகத்தில்,மைசூர் பகுதியில்
காணப்படுகிறது.
இதன் பழங்கள் கருமை கலந்த நீலம் அல்லது செம்மையோடிய
நீலநிறத்தில் கடினமாக மேலோட்டுடன் இருக்கும்.
இந்த மரத்தின் இலைகள் வாதமரத்தின் இலைகளைப் போல்
ஆறு அங்குல நீளத்தில் இருக்கும்.
முதிர்ந்த இலைகள் உதிர்ந்த உடன் அந்த கணுக்களில்
பூக்கள் வெண்மை நிறமுடையதாக இருக்கும்.
நேபாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில்
உயர்ந்தனவாக கருதப்படுகிறது.
இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசி நகரம்
தான் உருத்திராட்ச மணிகளுக்கு முக்கியமான சந்தையாக இருக்கிறது.
ருத்திராக்ஷம் மொத்தம் 21 முகம் மணி வரை உள்ளன.
எக முகம்,இரு முகம்,மூன்று முகம் என மூவகை முகம்
அபூர்வமானதாகவும்,சக்தி உடையனதாகவும் கருதப்படுகிறது.
ருத்திராக்ஷத்தின் காய்களின் அளவை வைத்து மூன்று
தரமாக பிரிக்கின்றனர்.
நெல்லிக்காய் அளவு – பூரண பலனையும்,
இலந்தைப் பழ அளவு – மத்திம் பலனையும்,
கடலை அளவுள்ளது
- அதம பலனையும் தருகிறது.
Monday, 9 November 2015
Thursday, 5 November 2015
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் மாரியம்மன் கோவில்
நிறுவனர்
: சருகு தொந்திலிங்க நாயக்கர்,
வருடம்
: கி.பி 1752 – 1803,
திருவிழா
: சித்திரை,மாசி மாதங்கள்,மொத்தம்
40 கிராமங்கள் கலந்து கொள்கின்றனர்,மாசி மாதத்தில் நடை பெறும் விழாவில் 16 நாள் திருவிழாவில்
முதல் நாள் காப்பு கட்டும் வைபவம் நடைபெறும், 15 வது நாள் திருவிழாவில் பகல் பொழுதில்
தீச்சட்டியும் மதிய வேலையில்
பூக்குழி வைபவமும் நடைபெறும்,16 வது நாள் இரவு 7
மணி முதல் 17 வது நாள் காலை வரை பூப்பல்லாக்கு வைபவம் நடைபெறும்.
Wednesday, 4 November 2015
யுகங்கள்
யுகங்கள்
1.கிருத யுகம் - இதில்
தியானம் மூலம் இறைவனை அடையலாம்.
2.திரோதா யுகம் - இதில்
யாகம்,ஒமம் மூலம் இறைவனை அடையலாம்.
3.துவாபரயுகம் - இதில் துதி அர்ச்சனை மூலம் இறைவனை அடையலாம்.
4.கலியுகம் - இதில்
பக்திபிரபத்தி மூலம் இறைவனை அடையலாம்.
நான்கு யுகமும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் எனப்படும்.
நவகிரகங்கள் அருளும் நன்மைகள்
நவகிரகங்கள் அருளும் நன்மைகள்
சூரியன் - ஆரோக்கியம்.
சந்திரன் - கீர்த்தி.
செவ்வாய் - நிலபுலம்,செல்வம்.
புதன் - கல்வி,அறிவு.
குரு - நன் மதிப்பு.
சுக்கிரன் - அழகு,சந்தோஷம்.
சனி - சந்தோஷம்.
ராகு - பகைவர் பயம் போக்குதல்.
Tuesday, 3 November 2015
பெண்கள் அணியும் ஆபரணத்துக்கு அர்த்தங்கள்
பெண்கள் அணியும் ஆபரணத்துக்கு அர்த்தங்கள்
தாலி - தாயாகி,தாலாட்டுப் பாடக் கணவன் தரும் பரிசுச் சின்னம்.
தோடு
- எதையும் காதோடு போட்டுக்கொள்,வெளியில்
சொல்லாதே!
மூக்குத்தி - மூக்கு
தான் சமையலை முதலில் அறியும் உத்தி என்பதை உணர்த்த.
வளையல்
- கணவன் உன்னை வளைய வளைய வரவேண்டும்
என்பதற்காக.
மோதிரம்
- எதிலும் உன் கைத்திறம் காண்பிக்க.
சித்தர்கள் சமாதியான திருத்தலங்கள்
சித்தர்கள்
சமாதியான திருத்தலங்கள்.
பழனி - போகர்.
சிதம்பரம்
- திருமூலர்.
விருத்தாசலம்
- பாம்பாட்டிச் சித்தர்.
திருவண்ணாமலை
- இடைக்காட்டுச் சித்தர்.
பேரூர்
- கோரக்கர்.
மாயவரம்
- குதம்பைச் சித்தர்.
திருவாரூர்
- கமல முனிவர்.
எட்டுக்குடி
- வான்மீகர்.
கரூர் - கருவூர்த்தேவர்.
திருவரங்கம்
- சட்டை முனிவர்.
திருப்பரங்குன்றம்
- மச்சமுனிவர்.
அழகர்கோவில்
- இராமதேவர்.
மதுரை - சுந்த்ரானந்த தேவர்.
வைத்தீஸ்வரன் கோயில்
- தன்வந்திரி.
அறுங்குணங்கள் ஆறு
குணங்கள் ஆறு
1.
உண்மை உரைத்தல்.
2. தர்மம் கொடுத்தல்.
3.சோம்பல் தவிர்த்தல்.
4.பொறாமை. விடுதல்.
5.பொறுமை கொளல்.
6.தைரியம் பேணல்
Subscribe to:
Posts (Atom)