Thursday, 3 December 2015

சிவயநம

சிவயநம

ஸ்தூல பஞ்சாட்சரமான ‘’சிவயநம’’என ஐந்தெழுத்துக்களுள் முதலில் உள்ள
                         சி – காரம் சிவத்தையும்,
                        வ – காரம் அருட் சக்தியையும்,
                        ய – காரம் ஆன்மாவையும்,
                        ந – காரம் திரோதானத்தையும்,
                        ம – காரம் ஆணவ மலத்தையும்,குறிப்பிடுவனவாம்.
நற்றவா!
உனை நான் மறக்கினுஞ் சொல்லும் நா
நமச்சிவாயவே!

                                                -சுந்தர முர்த்தி சுவாமிகள்

பிரணவம்

பிரணவம்
பிரணவம் என்பதற்கு வேறு பெயர் குடிலை ஒங்காரம்,தனிமொழி என்பன. அது’’ஒம்’’ என்பதுவே அதுவே மூலமானது.
‘’ஒம்’’ எனும் சொல் வலிமையும்,ஆற்றலையும் கொடுக்க வல்லது.
‘’ஒம்’’ என்ற பிரணவம் இல்லாத மந்திரம் சுவரில்லாத சித்திரம் போன்றதாகும்.
‘’ஒம்’’என்ற சொல் எல்லா வித தெய்வங்களையும்,
தேவதைகளையும் வரவேற்கும் தன்மை படைத்தது.
பிரணவம் இரு வகைப்படும்
1,சமஷ்டி பிரணவம்,
2,வியஷ்டி பிரணவம்,
சமஷ்டி பிரணவம் என்பது தொகுத்துக் கூறுவது அது’’ஒம்’’என்பதாகும்.
வியஷ்டி பிரணவம் என்பது வகுத்துக் கூறுவது அது அ-உ-ம என்ற மூன்று ஒலிகளின் தொகுப்பாகும்,
இம் மூன்றும் முறையே படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய தொழில்களைக் குறிப்பது.
‘’ஒம்’’ என்ற ஒலியை இறைவனது சக்தியே செலுத்தி நிற்றலால்

’’உய்ய என் உள்ளத்துள் ஒங்காரமாய் நின்ற மெய்யா’’என்கின்றனர்.

Tuesday, 17 November 2015

மனிதன்….

மனிதன்….
மனிதன் என்னும் சொல்லில் உள்ள
மன்   -            என்பத்ற்கு நினைப்பவன் என்பது                                         பொருள்,
மனம் -          என்ற ஒன்று உள்ளவன் மனிதன் எனவும்
 பொருள்கூறலாம்,
மனிதன் –    மற்ற பிராணிகளுக்கு இல்லாத                                             ஆறாவது அறிவாகிய பகுத்தாய்வு                                          மனிதனுக்கே படைக்கப் பட்டுள்ளது

உயிர் வர்க்கம்

உயிர் வர்க்கம்
4 வகைத் தோற்றம்
7 வகைப் பிறப்பு
84 லட்சம் உருவ வேற்றுமைகளோடு பிறக்கின்றன.
1.உயிர் வர்க்கம்
நால்வகைத் தோற்றமாவன;
1,அண்டஜம் – முட்டையில் தோன்றுவன,பறவை,ஊர்வன,நீர் வாழ்வன.
2,சுவேதஜம் – வேர்வையில் தோன்றுவன,கிருமி,பேன் முதலியன.
3,உத்பிஜ்ஜம் – வித்து,வேர்,கொடி,கொம்பு,கிழங்கு,இவற்றில் தோன்றுவன இவை தாவரங்கள்.
4,சராயுஜம் – கருப்பையில் தோன்றுவன,மனிதரும்,விலங்குகளுமாம்.
7 வகைப் பிறப்புகளாவன.
1,தேவர்     - பதினொரு இலட்சம் பேதம்,
2,மனிதர்    - ஒன்பது இலட்சம் பேதம்,
3,விலங்கு   - பத்து இலட்சம் பேதம்,
4,பறவை    - பதினைந்து இலட்சம் பேதம்,
5,ஊர்வன   - பதினைந்து இலட்சம் பேதம்,
6,நீர் வாழ்வன – பத்து இலட்சம் பேதம்,
7,தாவரம்    - பத்தொன்பது இலட்சம் பேதம் ஆக எண்பத்து நான்கு இலட்சம் பேதங்கள்.


Friday, 13 November 2015

துன்பம்…

துன்பம்…
மற்றவர்களுக்கு உதவி செய்வதே
துன்பத்திற்கு முழு முதற்காரணம் ஆகும்,
ஒருவருக்கு உதவி செய்கிறோம் எனில்,
அதற்கு அவர் தகுதியானவரா என அறிந்து
உதவி செய்தல் அவசியம்…
தீமை செய்தால் கூட துன்பம் வராது
நன்மை செய்தால் துன்பம் வரும்…
இது எனது அனுபவ மொழி.


ருத்திராக்ஷம்



ருத்திராக்ஷம்

ருத்திராக்ஷம்,உருத்திராக்கம் என பல பெயர்களில் அறியப்படும் இந்த உருத்திராக்ஷம் பல கருத்துக்களை உள்ளடக்கியன,வடமொழியில் ருத்ராக்ஷம் என்பதற்கு ‘’ருத்திரனின் கண்கள்’’ எனபதாக பொருள் கூறப்படுகிறது.
ருத்திரன் எனபது சிவனை குறிக்கிறது.
‘’Ganitrus’’என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் விதைதான் இந்த உருத்திராட்சம்.
இம் மரங்கள் காணப்படும் பகுதி:
இமயமலை அடிவாரம்,கங்கை நதியின் சமவெளிப் பகுதி,மலேயா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.
இந்த தாவரம் 90 வகை இருக்கிறது,என தாவரவியல் அறிஞர்கள் பகுத்துள்ளனர்.
இதில் 25 வகை மரங்கள் இந்தியா மற்றும் நேபாள நாடுகளில் காணப்படுகின்றன.
இந்த வகை மரங்கள் 80 அடி உயரம் வளரும்,
உருத்திராட்ச மரத்தின் சில வகைகள் தமிழகத்தின் பழநி,நீலகிரி போன்ற இடங்களில் கேரளாவில் திருவாங்கூர் பகுதியில் கர்நாடகத்தில்,மைசூர் பகுதியில் காணப்படுகிறது.
இதன் பழங்கள் கருமை கலந்த நீலம் அல்லது செம்மையோடிய நீலநிறத்தில் கடினமாக மேலோட்டுடன் இருக்கும்.
இந்த மரத்தின் இலைகள் வாதமரத்தின் இலைகளைப் போல் ஆறு அங்குல நீளத்தில் இருக்கும்.
முதிர்ந்த இலைகள் உதிர்ந்த உடன் அந்த கணுக்களில் பூக்கள் வெண்மை நிறமுடையதாக இருக்கும்.
நேபாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப்படுகிறது.
இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசி நகரம் தான் உருத்திராட்ச மணிகளுக்கு முக்கியமான சந்தையாக இருக்கிறது.
ருத்திராக்ஷம் மொத்தம் 21 முகம் மணி வரை உள்ளன.
எக முகம்,இரு முகம்,மூன்று முகம் என மூவகை முகம் அபூர்வமானதாகவும்,சக்தி உடையனதாகவும் கருதப்படுகிறது.
ருத்திராக்ஷத்தின் காய்களின் அளவை வைத்து மூன்று தரமாக பிரிக்கின்றனர்.
நெல்லிக்காய் அளவு – பூரண பலனையும்,
இலந்தைப் பழ அளவு – மத்திம் பலனையும்,
கடலை அளவுள்ளது  -  அதம பலனையும் தருகிறது.






Monday, 9 November 2015

நட்பு

நட்பு
கோப்பெருஞ்சோழனும்,பிசிராந்தையாரும் நட்பு கொண்டது அன்று
கோப்பைக்காகவும், பிரச்சனைக்காகவும் நட்பு
கொண்டது இன்று
நட்பு உண்மையாக இருந்தது அன்று
நட்பு உண்மைக்குப் புறம்பாக இருப்பது இன்று
பிற தேவைகளை பூர்த்தி செய்தது அன்றைய நட்பு

தன் தேவைகளை பூர்த்தி செய்தது  இன்றைய நட்பு.

Thursday, 5 November 2015

உலகில் உள்ள நான்கு வித பக்தர்கள்



உலகில் உள்ள நான்கு வித பக்தர்கள்



1, முக்தியை லட்சியமாக கொண்ட ஞானி,
2, குடும்ப வாழ்கை உயர தியானிக்கின்ற பக்தன்,
3, நோய்கள் நீங்க பிராத்தனை செய்பவர்கள்,

4, பணக்காரராக வேண்டும் என யாசிப்பவர்

மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை
மலர்களை     போல்    உள்ள
மெல்லிய இதழ்களை
புன்னகைகாதே….
வண்டுகள்
வந்துவிடும்
தேன் சுவைக்க….

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில்
நிறுவனர்  :  சருகு தொந்திலிங்க நாயக்கர்,
வருடம்     :  கி.பி 1752 – 1803,
திருவிழா   :  சித்திரை,மாசி மாதங்கள்,மொத்தம் 40 கிராமங்கள் கலந்து கொள்கின்றனர்,மாசி மாதத்தில் நடை பெறும் விழாவில் 16 நாள் திருவிழாவில் முதல் நாள் காப்பு கட்டும் வைபவம் நடைபெறும், 15 வது நாள் திருவிழாவில் பகல் பொழுதில் தீச்சட்டியும் மதிய வேலையில்

பூக்குழி வைபவமும் நடைபெறும்,16 வது நாள் இரவு 7 மணி முதல் 17 வது நாள் காலை வரை பூப்பல்லாக்கு வைபவம் நடைபெறும். 

Wednesday, 4 November 2015

யுகங்கள்

                          யுகங்கள்                                                               

                                                                  

1.கிருத யுகம்  -  இதில் தியானம் மூலம் இறைவனை அடையலாம்.              
2.திரோதா யுகம்  -  இதில் யாகம்,ஒமம் மூலம் இறைவனை அடையலாம்.
3.துவாபரயுகம்  - இதில் துதி அர்ச்சனை மூலம் இறைவனை அடையலாம்.
4.கலியுகம்  -  இதில் பக்திபிரபத்தி மூலம் இறைவனை அடையலாம்.      
நான்கு யுகமும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் எனப்படும்.

நவகிரகங்கள் அருளும் நன்மைகள்



 நவகிரகங்கள் அருளும் நன்மைகள்

சூரியன்          -  ஆரோக்கியம்.
சந்திரன்         -  கீர்த்தி.
செவ்வாய்     -  நிலபுலம்,செல்வம்.
புதன்               -  கல்வி,அறிவு.
குரு                   -  நன் மதிப்பு.
சுக்கிரன்       -  அழகு,சந்தோஷம்.
சனி                  -  சந்தோஷம்.

ராகு                 -  பகைவர் பயம் போக்குதல்.

Tuesday, 3 November 2015

பெண்கள் அணியும் ஆபரணத்துக்கு அர்த்தங்கள்

பெண்கள் அணியும் ஆபரணத்துக்கு அர்த்தங்கள்
தாலி  -  தாயாகி,தாலாட்டுப் பாடக் கணவன் தரும் பரிசுச்          சின்னம்.
தோடு  -  எதையும் காதோடு போட்டுக்கொள்,வெளியில் சொல்லாதே!
மூக்குத்தி  -  மூக்கு தான் சமையலை முதலில் அறியும் உத்தி என்பதை உணர்த்த.
வளையல்  -  கணவன் உன்னை வளைய வளைய வரவேண்டும் என்பதற்காக.
மோதிரம்  -  எதிலும் உன் கைத்திறம் காண்பிக்க.


சித்தர்கள் சமாதியான திருத்தலங்கள்


சித்தர்கள் சமாதியான திருத்தலங்கள்.
பழனி   -   போகர்.
சிதம்பரம்   -   திருமூலர்.
விருத்தாசலம்   -   பாம்பாட்டிச் சித்தர்.
திருவண்ணாமலை   -   இடைக்காட்டுச் சித்தர்.
பேரூர்   -   கோரக்கர்.
மாயவரம்   -   குதம்பைச் சித்தர்.
திருவாரூர்   -   கமல முனிவர்.
எட்டுக்குடி   -   வான்மீகர்.
கரூர்   -   கருவூர்த்தேவர்.
திருவரங்கம்   -   சட்டை முனிவர்.
திருப்பரங்குன்றம்   -   மச்சமுனிவர்.
அழகர்கோவில்   -   இராமதேவர்.
மதுரை   -   சுந்த்ரானந்த தேவர்.
வைத்தீஸ்வரன் கோயில்   -   தன்வந்திரி.


அறுங்குணங்கள் ஆறு


குணங்கள்  ஆறு


1.  உண்மை உரைத்தல்.
2. தர்மம் கொடுத்தல். 
3.சோம்பல் தவிர்த்தல்.
4.பொறாமை. விடுதல்.
5.பொறுமை கொளல்.
6.தைரியம் பேணல்