Wednesday, 28 July 2021

நல்லதைப் பேசுங்கள்

 

நல்லதைப் பேசுங்கள்

நல்லதைப் பேசவும், நல்லதை சாப்பிடவும் மட்டுமே நமக்கு வாய் கொடுக்கப்பட்டுள்ளது. 

மற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவது, பொய் சொல்வது, 

இல்லாத ஒருவரை குறை சொல்வது போன்ற செயல்கள் நாக்கை களங்கப்படுத்தும். 

வாயானது சாப்பிடுதல், பேசுதல் என இரு பணிகளைச் செய்கிறது. 

வாயை நல்ல சொற்களை பேச மட்டும் பயன்படுத்துவோம்.

இதுவும் கடந்து போகும்

 

இதுவும் கடந்து போகும்

 மனம் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் ஒரு ஆசிரியர்.

அதற்காக கண்ணாடி டம்ளர் ஒன்றை கையில் பிடித்தபடி,. "இது மிக லேசான பொருள் தான். இருந்தாலும் ஒரு மணிநேரம் தொடர்ந்து பிடித்தால் கை வலிக்கும். அதுவே பல மணி நேரமானால் கை மரத்துப் போகும். இந்த விஷயம் நம் மனதிற்கும் பொருந்தும். வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பம், பிரச்னை, இழப்பு ஆகியவற்றை மனதிலிருந்து இறக்கி வைக்காவிட்டால் மனம் வலிக்கும். இதுவும் கடந்து போகும் என அவற்றை விட்டு விட்டால் மனம் லேசாகி விடும்.

மனதை கையாளத் தெரிந்தவனே புத்திசாலி.

உண்மையான விரதம் எது?

 

உண்மையான விரதம் எது?

அவ்வையார் ஆன்மிகம் சார்ந்த 6 அருமையான  கருத்துக்களை விளக்குகிறார்

உயிர்களைக் கொல்லாதிருப்பதும், புலால் மறுப்பதுமே உண்மையான விரதம்.

பணத்தை சேமிக்கும் முன் சிக்கனமாகச் செலவழிக்க பழகுங்கள்.

நெருங்கிய நண்பனிடம் கூட வறுமையைப் பற்றி பேசாதீர்.

கையில் இருக்கும் பொன்னை விட மேலான செல்வம் கல்வியே.

பெற்ற தாயே மேலான தெய்வம். தந்தையின் வழிகாட்டுதலே சிறந்த மத்திரம்.

சிறந்த உணவாக இருந்தாலும் காலமறிந்து உண்பது அவசியம்.

 

சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு

 

சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு



சாரதாதேவி அழகான ஆறு ஆன்மிக அறிவுரையின் மூலம் நம்பிக்கையூட்டுகிறார்

சாத்தியம் இல்லாததையும் சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு.

அமைதிக்கு நிகரான புதையல் வேறில்லை.

தைரியத்துக்கு நிகரான பரிசு எங்குமில்லை.

உன் இதயத்தை விண்மீன்கள் போல் தூய்மையாக வைத்திரு .

உள்னிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்.

உலக வாழ்வில் பற்று குறைய குறைய மனம் அமைதி பெறும்.

நல்லவனாக வாழுங்கள்

 

நல்லவனாக வாழுங்கள்

நல்லவனாக வாழ விரும்பினால் உன்னிடம் இருப்பதை ஏழைகளுக்கு கொடு.

நாவடக்கத்துடன் இரு; தேவையில்லாமல் உதடுகளை அதிகம் திறக்காதே.

உண்மைக்கு எதிராக செயல்படாதே. கசப்பான பொறாமை, சச்சரவை விட்டு விடு.

பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.

 

எங்கும் எப்போதும் நேர்மை

 

எங்கும் எப்போதும் நேர்மை

பாரதியார் பின்பற்றச் சொல்லும் ஆறு அறிவுரைகள்:

வீட்டிலும், வெளியிலும், எங்கும். எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

தன்னுள் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி.

வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம்.

கடவுளை சரணடைந்தால் ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி என எல்லாம் உண்டாகும்.

தியானத்தின் மூலம் விரும்பியதை நம்மால் அடைய முடியும்.

பேச்சு, செயலில் முரண்படும் மனிதர்களிடம் உறவாடக் கூடாது.


காசியில் கண் கண்ட தெய்வம்

 

காசியில் கண் கண்ட தெய்வம்

கண் கண்ட தெய்வமான சூரியனுக்கு காசியில் 12 கோயில்கள் உள்ளன.

1. பகீரதன், தன் முன்னோர்கள் நற்கதி அடைய தவம் செய்து, பூலோகத்திற்கு கங்கா நதியை வர வழைத்தான், இதை அறிந்த சூரியன் அதில் நீராடினார். அவர் நீராடிய லலிதாகாட் படித்துறை அருகில் கங்காதித்யர் என்னும் சூரியக்கோயில் கட்டப்பட்டது.

2. காஷ்யப மகரிஷியின் மனைவி வினதைக்கு முட்டைகள் மூலம் குழத்தைகள் பிறந்தன. முதல் முட்டையில் ஆந்தையும், இரண்டாவது முட்டையில் அருணனும், முன்றாவது முட்டையில் கருடனும் தோன்றினர். இதில் ஆந்தையும், அருணனும் சூரியனை வழிபட்டனர். இதன் மூலம் ஆந்தைக்கு லட்சுமிதேவியின் வாகனமாகும் பாக்கியம் கிடைத்தது. சூரியனின் தேரோட்டும் சாரதியாகும் பேறு பெற்றார். அருணன் வழிபட்ட சூரியன் அருணாதித்யர் என்னும் பெயரில் அருள்புரிகிறார்.

3. கிருஷ்ணரின் மகன் சாம்பனுக்கு தொழுநோய் அற்பட்டது. இதிலிருந்து விடுபட சூரியனை சரணடையும்படி கிருஷ்ணர் வழிகாட்டினார். காசிக்கு வந்த சாம்பன் அங்குள்ள சூரியக்கோயிலில் வழிபட்டு பலம் பெற்றான். சாம்பன் வழிபட்ட சூரியன் 'சாம்பாதித்யர்" எனப்படுகிறார்.

4. கருடன் தன் தாய் வினதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாரும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவான் "சுஷோல்கா ஆதித்யர்' என அழைக்கப்படுகிறார். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோயில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னதி உள்ளது.

5. தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்னும் மன்னர், முனிவர்களின் ஆலோசனைப்படி சூரியனை வழிபட்டார். அவருக்கு காட்சியளித்த சூரியன், இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது என அருள்புரித்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் இவருக்கு கோயில் உள்ளது. இவருக்கு ‘விமலாதித்யர்' என்று பெயர்.

6. சூரியனின் மகனான எமதர்மன் தன் சக்தியைப் பெருக்க விரும்பி சூரியக் கோயில் ஒன்றைக் கட்டினார். "எமாதித்யர்" எனப்படும் இவருக்கு காசி சங்கடா காட்டில் கோயில் உள்ளது.

7. சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அன்னதானம் செய்தாள். அவள்

வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சய பீடத்தில் உள்ளது. இங்குள்ள சூரியனுக்கு 'திரவுபதி ஆதித்யர்’ என்று பெயர்.

8. விருத்தன் என்னும் அந்தணர் சூரியனை வழிபட்டதன் பயனாக முதுமை நீங்கி இளமையைப் பெற்றார். விருத்தன் வழிபாடு செய்த 'விருத்தாதித்யர் கோயில் காசியிலுள்ள மீர்காட்டில் உள்ளது.

9. மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் குரியனை ‘லோலார்க்கர்' என்று அழைப்பர். இவருக்கு காசியிலுள்ள அதிசங்கமத்தில் கோயில் உள்ளது. இங்குள்ள லோலார்க்க குண்டம் என்னும் குளம் புகழ் மிக்கது.

10. காசிக்கு வடக்கிலுள்ள ‘அலேம்புரா’ என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரிய தீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம் என்றும் இதைச் சொல்வர், இங்கு ஒரு ஆடும். ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சூரியன் 'உத்திர அர்க்கர்’ என்பது பெயர்.

11. கங்கையிலுள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். மகாவிஷ்ணுவான கேசவனின் அருளால் அமைத்த சிவலிங்கம் இங்குள்ளது. இங்குள்ள சூரியனுக்கு 'கேசவாதித்யர்' என்று பெயர்.

12. கங்கைக்கரையிலுள்ள பஞ்ச கங்காராட் அருகில் மயூகாதித்யர் என்னும் குரியக்கோயில் உள்ளது. புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்கள கவுரி என்னும் பெயர்களில் சிவபார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார். மனம் இரங்கிய சிவன் காட்சியளித்து சூரியனுக்கு "மயூகன்" (என்றும் அழியாதவன்) என்று பெயர் சூட்டினார். காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரோடு சூரியக் கோயில்களையும் வழிபட்டால் சகல வரங்களும் கிடைக்கும்.

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை

 

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை

ஆன்மிகம் பற்றி வாரியார் தெளிவுபடுத்துகிறார்

உலகில் எல்லாம் தெரித்தவரோ, எதுவும் தெரியாதவரோ யாருமில்லை.

இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தால் நலமாக வாழலாம்,

கரையான் போல் பிறர் பொருளைக் கெடுத்து மகிழ்வது கூடாது.

அறிவு தரும் நுரல்களை படிக்காமல் இருப்பது பெரும்பிழை.

ஆடம்பரமும் அலட்சிய எண்ணமும் கீழ்நிலைக்கு தள்ளி விடும்.

அன்பு, அறிவு வெளியில் தெரியாது. அவற்றை உணர மட்டுமே முடியும்.

Tuesday, 27 July 2021

நீராடப் போறீங்களா...

 

நீராடப் போறீங்களா...

1. புனித நதிகளில் நீராடுவோர் இரவில் நீராடக் கூடாது.

2. வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை சிறிது நீரை உள்ளங்கையில்

    எடுத்து தலை மீது தெளிக்க வேண்டும்.

3. புண்ணிய நதி, கடலில் நீராடுவோருக்கு சிவன், மகாவிஷ்ணு அருளால் பாவம் நீங்கும்.

4. தீர்த்தங்களில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. முதல் முறையால் பாவம்

    தீரும். இரண்டாம் முறையால் சொர்க்க வாழ்வு கிடைக்கும். மூன்றாம் முறையால்

    புண்ணியம் பெருகும்.

5. நீராடியதும் அம்பிகையை வழிபட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய விருப்பம்

    நிறைவேறும்.

எமனின் வேறு பெயர்கள்

 

எமனின் வேறு பெயர்கள்

இயமன்         - எல்லாவற்றையும் அடக்குபவன்

கூற்றுவன்    - உயிரையும், உடலையும் பிரித்து கூறு போடுபவன்

சமன்             - எல்லா உயிர்களையும் சமமாக கருதுபவன்

மறலி             - வலிமை மிக்கவன்

அந்தகன்       - வாழ்வில் முடிவைத் தருபவன்

மகாமக குளக்கரையில் உள்ள குளக்கரை லிங்கங்கள்

 

மகாமக குளக்கரையில் உள்ள குளக்கரை லிங்கங்கள்

மகாமக குளக்கரையில் 16 சிவலிங்கங்களுக்கு சன்னதி உள்ளன.

1. பிரம்ம தீர்த்தேஸ்வரர்

2. முகுந்தேஸ்வரர்

3. தனேஸ்வரர்

4. விருஷபேஸ்வரர்

5. பரணேஸ்வரர்

6. கோணேஸ்வரர்

7. பக்திஹேஸ்வரர் 

8. பைரவேஸ்வரர்

9. அகத்தீஸ்வரர்

10. வியாசேஸ்வரர்

11. உமைபாகேஸ்வரர்

12. நைருத்தீஸ்வரர்

13. பிரம்மேஸ்வரர்

14. கங்காதரேஸ்வரர் 

15. முத்த தீர்த்தேஸ்வரர்

16. ஷேத்திர பாலேஸ்வரர்

The Nilgiris

 

The Nilgiris

Nilgiris

The meaning of the word ‘Nilgiri’ is ‘Blue hill’. It is literally true that the hill in this area is filled with thick blue green trees. This is regarded as a natural charming hill station of south India. It is one of the small districts of Tamil Nadu. It is situated in the western part of Tamil Nadu, the junction of Eastern and Western Ghats of the Sahyadri Hills. The steep hill are a common scence in this area, as well as narrow valleys with numerous perennial rivers and river lets, running down and forming several fine waterfalls. With all this, this is a district of great natural beauty in Tamil Nadu.  

Monday, 26 July 2021

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடக்கூடிய விழாக்கள்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடக்கூடிய விழாக்கள்

கோவில் மாநகரம் என்று அழைக்கப்படக்கூடிய மதுரை மாநகரில் மிகவும் புகழ்பெற்று விளங்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத பெருமான் திருக்கோவிலில் மாதங்கள் தோறும் கொண்டாடப்படும் முக்கியான திருவிழாக்கள் பின்வருமாறு :

சித்திரைப் பெருவிழா

வைகாசி வசந்த உற்சவம்

ஆனி உத்திரம்

ஆனி ஊஞ்சல்

ஆடி முளைக் கொட்டு உற்சவம்

ஆடி சுவாதி

ஆடி புதுக்கணக்கு

ஆவணி மூல உற்சவம்

ஐப்பசி பூரம்

ஐப்பசி அன்னாபிஷேகம்

திருக்கார்த்திகை திருவிழா

மாசி மண்டல உற்சவம்

அருளாளர் மாணிக்கவாசகர் உற்சவம்

அருளாளர் மாணிக்கவாசகர் திருநட்சத்திரம்

அஷ்டமி சப்பரம்

எண்ணைக்காப்பு உற்சவம்

கோடைவசந்த உற்சவம்

கோலட்ட உற்சவம்

தெப்ப உற்சவம்

நவராத்திரி உற்சவம்

மகாளய அமாவாசை

விநாயகர் சதுர்த்தி

ஸ்ரீகந்தர் சஷ்டி

தனூர் மாதம் காலம்

மகாருத்ராபிஷேகம்

போன்ற விழாக்கள் வருடத்தின் ஒவ்வொரு மாதங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்று கொண்டாடப்படுகிறது.