Monday, 13 September 2021

கடவுளுக்கு செய்யப்படும் 16 வகையான பணிவிடைகள்

 

கடவுளுக்கு செய்யப்படும் 16 வகையான பணிவிடைகள்

கடவுளைப் பணிந்து வணங்கி விருந்தினர். போலப் பாவித்து 16 வகையான பணி விடைகளைச் செய்ய வேண்டும்.

1. ஆசனம் - அமர்வதற்கு தவிசு அளித்தல்

2. பாத்யம் - கால் அலம்ப நீர் தருதல்

3. அர்க்யம் - கை கழுவ நீர் கொடுத்தல்

4. ஆசம நியம் -  பருகுவதற்கு நீர் வழங்கல்

5. அபிஷேகம் - திருமுழுக்கு நீராட்டுதல்

6. வஸ்த்ரம் - உயர்ந்த ரக ஆடைகளை அணிவித்தல்

7. புஷ்பம் - மலர் மாலைகளை சூட்டுதல்

8. தூபம் - அகில், சந்தனம், சாம்பிராணி நறுமணப் புகை இடுதல்

9. கந்தம் - நறுமணப் பொருட்களை அளித்தல்

10. தீபம் - ஒளிவிளக்குகள் ஏற்றி மும்முறை வலம் காட்டுதல்

11. நைவேத்யம் - உணவுப் பொருள்களைப் படைத்தல்

12. கற்பூரம் - கற்பூர ஒளி ஏற்றிப் பணிதல்

13. சாமரம் - கவரி (விசிறி) வீசுதல்

14. ஆலவட்டம் - விசிறி கொண்டு வீசுதல்

15. சத்ரம் - குடை கவித்தல்

16. தர்ப்பணம் - கண்ணாடி காட்டுதல்

ஷோடச தீபாராதனை  

மேற்கண்ட பதினாறு உபசாரங்களில் ஷோடச தீபாராதனை ஒரு சிறப்பான அங்கமாகும். அவற்றின் விளக்கத்தினை கீழே காணலாம்.

1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்

2. தீபம் - விழிப்பு

3. மகாதீபம் - அரச போகம்

4. நாகதீபம் - உயர் பதவி

5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்

6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்;

7. சூல தீபம் - ரோக நிவர்த்தி

8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்

9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்

10. வியாக்ர புயிதீபம் - துஷ்ட நிவர்த்தி

11. சிம்மதீபம் - ஆயுள் விருத்தி

12. கொடிதீபம் - செல்வ மேன்மை

13. மயூரதீபம் - மக்கட் பேறு;

14. பூர்ணகுமபதீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்

15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை

16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.

 

 

 

 

 

No comments:

Post a Comment