கடவுளுக்கு
செய்யப்படும் 16 வகையான பணிவிடைகள்
கடவுளைப் பணிந்து வணங்கி விருந்தினர். போலப் பாவித்து 16 வகையான பணி விடைகளைச்
செய்ய வேண்டும்.
1. ஆசனம் - அமர்வதற்கு தவிசு அளித்தல்
2. பாத்யம் - கால் அலம்ப நீர் தருதல்
3. அர்க்யம் - கை கழுவ நீர் கொடுத்தல்
4. ஆசம நியம் - பருகுவதற்கு நீர்
வழங்கல்
5. அபிஷேகம் - திருமுழுக்கு நீராட்டுதல்
6. வஸ்த்ரம்
- உயர்ந்த ரக ஆடைகளை அணிவித்தல்
7. புஷ்பம் - மலர் மாலைகளை சூட்டுதல்
8. தூபம் - அகில், சந்தனம், சாம்பிராணி நறுமணப் புகை இடுதல்
9. கந்தம் - நறுமணப் பொருட்களை அளித்தல்
10. தீபம் - ஒளிவிளக்குகள் ஏற்றி மும்முறை வலம் காட்டுதல்
11. நைவேத்யம் - உணவுப் பொருள்களைப் படைத்தல்
12. கற்பூரம் - கற்பூர ஒளி ஏற்றிப் பணிதல்
13. சாமரம் - கவரி (விசிறி) வீசுதல்
14. ஆலவட்டம் - விசிறி கொண்டு வீசுதல்
15. சத்ரம் - குடை கவித்தல்
16. தர்ப்பணம் - கண்ணாடி காட்டுதல்
ஷோடச
தீபாராதனை
மேற்கண்ட பதினாறு உபசாரங்களில் ஷோடச தீபாராதனை ஒரு சிறப்பான அங்கமாகும்.
அவற்றின் விளக்கத்தினை கீழே காணலாம்.
1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்
2. தீபம் - விழிப்பு
3. மகாதீபம் - அரச போகம்
4. நாகதீபம் - உயர் பதவி
5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்
6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்;
7. சூல தீபம் - ரோக நிவர்த்தி
8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்
9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்
10. வியாக்ர புயிதீபம் - துஷ்ட நிவர்த்தி
11. சிம்மதீபம் - ஆயுள் விருத்தி
12. கொடிதீபம் - செல்வ மேன்மை
13. மயூரதீபம் - மக்கட் பேறு;
14. பூர்ணகுமபதீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்
15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை
16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.
No comments:
Post a Comment