யாழ் பற்றிய வரலாறு
"யாழுங்குழலுஞ் சீருமிடறும்
தாழ்குரற்றண்ணுமை யாடலொடிவற்றின்
இசைந்த பாடலிசையுடன் படுத்து..."
என்கிற சிலப்பதிகார பாடலில் யாழுங் குழல் என்கிற யாழ் இசை, குழல் இசை பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதே போன்று
திருக்குறளில் "குழல் இனிது, யாழ் இனிது" என இவ்விரு இக்கருவிகளைப் பற்றிக்
கூறப்பட்டுள்ளது. இப்படிப் பல இலக்கியங்களில் தமிழர்களின்
இசைக் (Wind Instruments) கருவியான குழல் என்கிற
நாதஸ்வரத்தைப் பற்றியும், யாழ் பற்றியும் (String
Instruments), விலங்குத் தோலினால் செய்யப்பட்ட தோல் கருவிகளைப் பற்றியும் (Percussion Instruments) தகவல்கள் உள்ளன.
யாழ்
என்பது பொதுவாக நான்கு வகைப்படும். அவை
21
நரம்புகள் கொண்ட பேரியாழ்.
19 நரம்புகள் கொண்ட மகரயாழ்,
14
நரம்புகள்
கொண்ட சகோடயாழ்,
7
நரம்புகள் கொண்ட
செங்கோட்டுயாழ் என்பன ஆகும்.
இந்த
யாழைப்
பற்றி எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானுற்றில் கூறப்பட்டுள்ளது. அதாவது போரிலே விழுப்புண் பெற்று வீட்டிற்கு வரும் தலைவனை, தலைவி வரவேற்கும்போது இசைக்கப்பட்ட கருவிகளில் யாழும் ஒன்றாகும்.
விலங்கினங்களின் தோலாற்
செய்யப்பட்ட பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம்,
சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு தும்பு நிசாளம், துடுமை, சிறுபறை, பதலை, தருணிச்சம், விரலேறு, பெரும்பறை போன்ற வாத்தியக் கருவிகளை பண்டைய தமிழர்கள்
No comments:
Post a Comment