இராமயணத்தில் திருப்புமுனைகள்
இராமாயணக் கதைக்கு இரண்டு திருப்பு முனைகள்,
அவை நாக்காலும், மூக்காலும் ஏற்பட்டவையே. முதாலவது,
கூனியின் நாவன்மை. கூனியின்
பேச்சில் மயங்கித்தானே கைகேயி இராமனைக் காட்டுக்கு
அனுப்பினாள்! அது முதல் திருப்பம்.
அதுபோல வனவாசத்தின்
போது, தங்கள் மீது மயக்கம் கொண்ட சூர்ப்பனகையின்
மூக்கை இலட்சுமணன் வெட்ட, அதனால் கோபம் கொண்ட அவள்,
அண்ணன் இராவணனிடம் சென்று சீதையைக் கைப்பற்றுமாறு யோசனை சொன்னாளே. இது இரண்டாவது திருப்பம்.
இராவணனின் கட்டளைப்படி சீதையைக் கவர மாயமான் ஆகினான் மாரீசன். அதாவது, தான் மாய, தானே மானாக உருவெடுத்தான்!
No comments:
Post a Comment